Saturday, January 31, 2009

புதுச்சேரி: ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து மாணவர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்துப் போராட்டம் - படங்கள்!















இலங்கையில் ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்து வருகிறது. சொந்த நாட்டு மக்கள் 3 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஈவி இரக்கமற்ற சிங்கள இராணுவம் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி வருகின்றனர்.

எனவே, சிங்கள இனவெறி அரசின் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசே இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், 30.01.2009 அன்று புதுச்சேரி முழுவதுமுள்ள அனைத்துக் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்துப் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு இப்போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தது.

No comments: